மேற்படி திட்டத்திற்காக 2020.02.27ம் திகதி பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை அறிவித்தலுக்கமைய விண்ணப்பித்திருந்து தகைமைகளை பூரணப்படுத்துவதற்கு முடியாமற் போனவர்களின் பெயர்ப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்தவராக இருத்தல் (EPF/Job) மற்றும் தொழிலில் ஈடுபடல் எனும் விடயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள் மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பம் என்பவற்றை அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. உரிய விண்ணப்பத்தினை பூரணப்படுத்தி அறித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன் தாம் விண்ணப்பித்துள்ள பிரதேச செயலாளரிடம் 2020.09.15ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விபரம் மற்றும் விண்ணப்பம் -
No comments:
Post a Comment