நாட்டின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய தற்பொழுது புதிதாக பயிற்சி அடிப்படையில் நியமனம் வழங்கப்படுபவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலின்போது பல மாவட்டங்களில் ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட விஜயத்தின் போதே பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பான விடயம் மக்களால் ஜனாதிபதி அவர்களிடம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
தகைமை பெற்றுள்ள பட்டதாரிகள் தாங்கள் கற்றுள்ள பாடவிதானங்களுக்கமைய குறித்த துறைகளில் தொழிலில் அமர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment