கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-1 (இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2020 இற்கான விண்ணப்பங்கள் கிழக்குமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் நான்கு நகரங்களில் நடாத்தப்படும் இப்போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி எதிர்வரும் 2020.10.08.
இது தொடர்பான முழு விபரங்கள் மற்றும் விண்ணப்பம் என்பன கிழக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விபரம் மற்றும் விண்ணப்பம் - Download
No comments:
Post a Comment