நிவாரண அலுவலர், கலாச்சார அலுவலர், விசாரணை அலுவலர் ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சை விண்ணப்பங்கள் - Today First

Application

PHI Selected Name List

Breaking

Friday, June 19, 2020

நிவாரண அலுவலர், கலாச்சார அலுவலர், விசாரணை அலுவலர் ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சை விண்ணப்பங்கள்



மேல்மாகாண அரசாங்க சேவையினால் விண்ணப்பம் கோரப்பட்ட கீழ்வரும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்ப முடிவுத்திகதிகள் நீடிக்கப்பட்டுள்ளன.

1. மேல்மாகாண அரச சேவையில் கொழும்பு மாநகர சபையில் இணை அலுவலர் சேவை வகையின் நிவாரண அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2020

2. மேல்மாகாண சேவையில் இணை அலுவலர் சேவை வகையின் கலாச்சார அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2020
3. மேல்மாகாண அரச சேவையில் உள்ளூராட்சி திணைக்களத்தில் விசாரணை அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2020

நிவாரண அலுவலர் தரம் III, கலாச்சார அலுவலர் தரம் III ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கடந்த 2020 பெப்ரவரி 21ம் திகதிய அரச வர்த்தமானியில் கோரப்பட்டிருந்தது.

விசாரணை அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கடந்த மார்ச் மாதம் 06ம் திகதிய அரச வர்த்தமானியில் கோரப்பட்டிருந்தது.

இப்பதவிகளில் நிவாரண அலுவலர், கலாச்சார அலுவலர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி கடந்த 2020.03.23ஆகும்.

விசாரணை அலுவலர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி கடந்த ஏப்ரல் மாதம் 06ம் திகதியாகும்.

எனினும் தற்பொழுது நிவாரண அலுவலர், கலாச்சார அலுவலர், மற்றும் விசாரணை அலுவலர் ஆகிய பதவிகள் அனைத்துக்குமான விண்ணப்ப முடிவுத்திகதிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 20 வரை நீடிக்கப்பட்டுள்ளன.

இப்பதவிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிப்பு தொடர்பான அறிவித்தலை மேல்மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.





No comments:

Post a Comment

Pages