அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கட்டளைப்படி நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் கடந்த 2020.03.06ம் திகதிய வர்த்தமானியில் கோரப்பட்டிருந்தது.
இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி கடந்த 2020.04.06ம் திகதியென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலைமைகளின் காரணமாக இப்போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி பிற்போடப்பட்டிருந்தது.
எனினும் தற்பொழுது இப்பதவிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 2020. ஜூலை 03ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்ட வர்த்தமானி - Download
விண்ணப்பம் கோரப்பட்ட வர்த்தமானி - Download
No comments:
Post a Comment