இப்பரீட்சை தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் சுருக்கமான விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இப்பரீட்சை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் 2020 செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடாத்தப்படவுள்ளது.
பரீட்சைக்குரிய பாடத்திட்டம்
இப்பரீட்சையானது இரண்டு வினாப்பத்திரங்களை கொண்டது.
1. அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக்கோவை
2. நிதிப்பிரமாணம்
விண்ணப்பித்தல்
முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலம் 2020.07.14ம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு கீழ்வரும் விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
பரீட்சை ஆணையாளர் நாயகம்,
ஒழுங்கமைப்பு (நிறுவனம் சார் மற்றும் வெளிநாட்டு பரீட்சைகள்) பிரிவு,
இலங்கை பரீட்சைகள் திணைக்களம்,
தபால் பெட்டி இலக்கம் - 1503, கொழும்பு.
விண்ணப்பத்தினை அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தொழிநுட்ப உதவியாளர் IIIஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை - 2019(2020) என குறிப்பிடப்படல் வேண்டும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட விபரம் மற்றும் விண்ணப்பம் என்பன கீழே தரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment